ஆப்நகரம்

அரசை பாராட்டிய ரஜினிகாந்திற்கு பாராட்டு - அமைச்சர் எஸ்பி வேலுமணி

கந்த சஷ்டி கவசம் தொடர்பான சர்ச்சைக்கு நடிகர் ரஜினி நல்ல முறையில் குரல் கொடுத்ததாக அமைச்சர் வேலுமணி பாராட்டியுள்ளார்.

Samayam Tamil 22 Jul 2020, 6:11 pm
கந்த சஷ்டி கவசம் குறித்து இழிவாக பேசியதாக குற்றச்சாட்டில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசை பாராட்டியும், இந்து கடவுளை விமர்சித்த நிகழ்வினை கண்டித்தும் நடிகர் ரஜினி ட்வீட்டியிருந்தார்.
Samayam Tamil sp velumani


''கந்தனுக்கு அரோகரா'' என்ற ஹாஷ்டேகுடன் வைரலாகும் அந்த ட்வீட் தற்போது வரை 40 ஆயிரம் லைக்குகளை பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகர் ரஜினியின் ட்வீட்டை பாராட்டி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மறுபதிவிட்டுள்ளார்.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழக முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான தமிழக அரசு சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் யாராயினும் அரசியல் செய்யாமல் உடனடியாக கடும் நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கு அமைதியை நிலைநாட்டி வருகிறது.


ரஜினிக்கு இ- பாஸ் கொடுத்தீங்களா? - அதுவா... அது... விசாரிக்கணும்..!

அவ்வகையில் கவசமாக இருந்து காக்க என்று கந்தர் அருள்வேண்டி கோடிக்கணக்கான தமிழர்கள் பாடும் பாடலை நிந்தனை செய்தோர் மீதும் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்க முயன்றோர் மீதும் முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தமைக்கு பாராட்டு தெரிவித்து பாகுபாடு இல்லா சமய நல்லிணக்கத்திற்கு குரல் கொடுத்துள்ள ரஜினிகாந்துக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் '' என ரஜினியின் ட்வீட்டுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

அடுத்த செய்தி