ஆப்நகரம்

'அவரை அழைத்தால் கங்கை நீரால் கழுவணும்.. ஆர்எஸ்எஸ் மனநிலை அதுதான்'... சபாநாயகர் அப்பாவு பொளேர்!

நாடாளுமன்றத்தை திறக்க குடியரசுத் தலைவரை அழைத்தால் கங்கை நீரால் கழுவ வேண்டும் என்ற மனநிலையில் தான் ஆர்எஸ்எஸ் இருப்பதாக சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறக்க குடியரசுத் தலைவரை அழைக்காதது குறித்து விமர்சித்த அப்பாவு இவ்வாறு கூறியுள்ளார்.

Authored byபஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil 30 May 2023, 9:45 am
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி ராஜா, சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் டி ராஜாவுக்கு பெரியார் ஒளி விருது வழங்கப்பட்டது.
Samayam Tamil Speaker Appavu


சபாநாயகர் அப்பாவுக்கு காமராசர் கதிர் விருது வழங்கப்பட்டது. மேலும் அம்பேத்கர் சுடர் விருது, அயோத்தி தாசர் விருது உள்பட பல விருதுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இந்த விருது விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, திருமாவளவன் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமின்றி கடை நிலை சமூகத்தில் உள்ளவர்கள் தவறு செய்தால் கூட தட்டிக் கேட்கும் இடத்தில் எல்லோருக்கும் பொதுவானவராக இருக்கிறார் என்றார்.
ப்பா... ஆளைக்கொல்லும் அழகு... ராஷி கன்னாவின் அசரடிக்கும் போட்டோஸ்!
இந்தியாவில் ஆயிரக்கணக்கான திருமாவளவன் தோன்ற வேண்டிய காலம் கட்டாயம் இப்போது ஏற்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார். மேலும் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அழைக்காத மத்திய அரசையும் விமர்சித்தார் அப்பாவு. ஜனநாயகத்தின் உயர்ந்த மரியாதையை ஜனாதிபதிக்கிதான் கொடுத்திருக்கிறார்கள்.

அவரை புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழாவுக்கு அழைக்காமல் இருப்பது நாட்டு மக்கள் வேதனைப்படுத்தியுள்ளது. அவரை அழைத்தால் கங்கை நீரை கொண்டு நாடாளுமன்றத்தை கழுவ வேண்டும் என்ற மன நிலையில்தான் ஆர்எஸ்எஸ் உள்ளது. இப்போதும்
அந்த மனநிலையில் தான் ஆர்எஸ்எஸ் உள்ளது என சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.
'அமைச்சர் பதவிக்கே அவமானம் நீங்கள்'... மனோ தங்கராஜை விளாசிவிட்ட குஷ்பு!
புதிய நாடாளுமன்ற கட்டடம் தலைநகர் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை திறக்கப்பட்டது. இந்தப் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஆனால் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர்தான் திறக்க வேண்டும் என்று வலியுறுத்திய எதிர்க்கட்சிகள் இந்த விழாவை புறக்கணித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
பஹன்யா ராமமூர்த்தி
செய்தி சேனல், எஃப் எம் (RJ) மற்றும் டிஜிட்டல் ஊடத்துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளேன். பொது செய்திகள், அரசியல், க்ரைம், விளையாட்டு சினிமா மற்றும் உலக நடப்பு செய்திகளில் அனுபவம்.. தற்போது சமயம் தமிழில் சினிமா செய்திகளை அளித்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி