ஆப்நகரம்

சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் அவசர ஆலோசனை

சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் பழனிச்சாமி , துணை முதல்வர் பன்னீர் செல்வம் இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர்.

TNN 15 Sep 2017, 2:45 pm
சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் பழனிச்சாமி , துணை முதல்வர் பன்னீர் செல்வம் இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர்.
Samayam Tamil speaker dhanapal and edappadi k palaniswami were in urgent consultative meeting
சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் அவசர ஆலோசனை


தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வரும் நிலையில், இன்று சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் , சட்ட அமைச்சர் சி.வி சண்முகம் , அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த செப்டம்பர் 20 தேதிவரை இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

தினகரன் ஆதரவு எம் எல் ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இந்த ஆலோசனைக்கூட்டதில் முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் தினகரன் ஆதரவு எம்எல்ஏ ஜக்கையன் மனம் மாறி எடப்பாடி அணியில் இணைந்துள்ளதால், மீதமுள்ள 19 எம்எல்ஏக்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள சபாநாயகருடனான சந்திப்புக்கு மீண்டும் அழைப்பு விடப்படும் என்று தெரிகிறது.

அடுத்த செய்தி