ஆப்நகரம்

கார்த்திகை தீபத் திருநாள் : பட்டையைக் கிளப்பும் அரசு போக்குவரத்துக் கழகம் !!

கார்த்திகை தீபத் திருநாளையொட்டி, திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Samayam Tamil 5 Dec 2019, 5:39 pm
கார்த்திகை தீபத் திருநாளையொட்டி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு மொத்தம் 2, 612 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
Samayam Tamil கார்த்திகை தீபம் : பட்டையைக் கிளப்பும் அரசுப் போக்குவரத்துக் கழகம்


சிவப்பெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில், திருவண்ணாமலை அக்னி ஸ்தலமாக திகழ்கிறது.
இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருநாள உலக பிரசித்திப் பெற்றது.

இத்திருநாளில் மலை மீது ஏற்றப்படும் மகாதீபத்தை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமன்றி, அண்டை மாநிலங்கள், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகைப் புரிவது வழக்கம்.

தீபாவளி பண்டிகை: 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கம்

இந்த ஆண்டு, வரும் 10 ஆம் தேதி (டிசம்பர் 10) கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று மாலை 6 மணியளவில் திருவண்ணாமலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இத்திருநாளையொட்டி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதென அரசுப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

கும்பகோணம், திருச்சி மார்க்கத்தில் -450, சேலம், தருமபுரி, பெங்களூரு வழித்தடத்தில் -250, கோவையிலிருந்து 122, மதுரை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய இடங்களிலிருந்து மொத்தம் 190 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

போதிய சிறப்பு பேருந்துகள் இல்லாததால் வெளியூர் செல்லும் மக்கள் அவதி

இதேபோன்று சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம், வேலூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து 1,612 பேருந்துகள் என மொத்தம் 2,612 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (விழுப்புரம்) நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வரும் 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை இச்சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி