ஆப்நகரம்

தைப்பூசம்: பழனிக்கு இத்தனை பேருந்துகளா? பக்தர்கள் மகிழ்ச்சி!

தைப் பூசம் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

Samayam Tamil 22 Jan 2021, 2:50 pm
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா இன்று (ஜனவரி 22) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
Samayam Tamil palani special bus


ஜனவரி 31ஆம் தேதி வரை தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூச தேரோட்டம் வருகிற 28ஆம் தேதி நடக்கிறது.

தைப்பூசம் திருநாளை முன்னிட்டு ஜனவரி 28ஆம் தேதியை தமிழக அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் இது தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் சசிகலா விடுதலை தள்ளிப் போகுமா? வெளியான முக்கிய தகவல்!

இந்நிலையில் பழனிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல், மதுரை, திருச்சி, காரைக்குடி, நத்தம், புதுக்கோட்டை, தேனி, கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து பழனிக்கு பக்தர்கள் வருகை தருவார்கள்.
ஜெ. நினைவு மண்டபம்: பணம் தராமல் கமிஷன் கேட்கும் பொதுப் பணித்துறை!
எனவேபக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திண்டுக்கல் மண்டலம் சார்பில் வருகிற 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை மேற்குறிப்பிட்ட இடங்களில் இருந்து பழனிக்கும், பழனியில் இருந்து மேற்குறிப்பிட்ட இடங்களுக்கும் 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மதுரை அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் முருகேசன் இந்த தகவலை தெரிவித்தார்.

அடுத்த செய்தி