ஆப்நகரம்

இரண்டு நாட்கள் தான்; தமிழகத்தில் சிறப்பு முகாம் - மிஸ் பண்ணிடாதீங்க!

வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது. இதனை வாக்காளர்கள் தவறாமல் பயன்படுத்திக் கொண்டு ஜனநாயகக் கடமையை ஆற்ற தயாராகுங்கள் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 12 Dec 2020, 11:18 am
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேலைகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. முதல்கட்டமாக வாக்காளர் பட்டியலை சரிசெய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதையொட்டி கடந்த மாதம் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வரும் டிசம்பர் 15ஆம் தேதி வரை வாக்காளர் அடையாள அட்டை திருத்தம் தொடர்பாக விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதன்மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், இடமாற்றம் உள்ளிட்ட விஷயங்களை செய்து கொள்ளலாம்.
Samayam Tamil Voter ID Correction


இதற்கான சிறப்பு முகாம் கடந்த மாதம் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில் இன்று (டிசம்பர் 12) மூன்றாம் கட்டமாக சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மொத்தம் 68 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய முகாம் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

நான்காம் கட்ட வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நாளை (டிசம்பர் 13) நடைபெறவுள்ளது. பின்னர் வரும் ஜனவரி மாதம் வண்ணப் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வாக்காளர்களுக்கு வழங்கப்படும்.

சூர்யா படத்தில் இணைந்த பிசாசு நாயகி!

இதையடுத்து வரும் ஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாம்களை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

வரும் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற விரும்பும் மக்கள், இந்த சிறப்பு முகாம்களை தவறவிடக் கூடாது என்பதே பலரது விருப்பமாக இருக்கிறது. இதுதொடர்பாக சமூக வலைதளங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி