ஆப்நகரம்

அரசு பஸ்ஸை அழகுபடுத்திய ஊழியர்களுக்கு சிறப்பு பரிசு!

தமிழக போக்குவர்த்து கழகத்தில் உள்ள ஒரு அரசு பஸ்ஸை அழகு படுத்திய ஓட்டுனர், நடத்துனர் மற்றும் அதிகாரிகளுக்கு அரசு சிறப்பு பரிசு வழங்கியுள்ளது.

TNN 27 Oct 2016, 12:09 pm
திருப்பூர் : தமிழக போக்குவர்த்து கழகத்தில் உள்ள ஒரு அரசு பஸ்ஸை அழகு படுத்திய ஓட்டுனர், நடத்துனர் மற்றும் அதிகாரிகளுக்கு அரசு சிறப்பு பரிசு வழங்கியுள்ளது.
Samayam Tamil special gift for government bus workers
அரசு பஸ்ஸை அழகுபடுத்திய ஊழியர்களுக்கு சிறப்பு பரிசு!


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையிலிருந்து, திருப்பூர் மாவட்டத்திற்கு இயக்கப்படும் அரசு விரைவு பேருந்து ஒன்றில் எல்.இ.டி டிவி, 6 டிராக் மியூசிக் சிஸ்ட மற்றும் கண்ணை கவரும் ஒளி விளக்குகளால் அலங்காரம் செய்த அந்த பேருந்தை இயக்கி வரும் முருகேசன்,ரங்கராஜ், கண்ணன், பாரதிதாசன் மற்றும் உயர் அதிகாரி ஒரு வருக்கு சிறப்பு பரிசு வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது.

இந்த பேருந்தின் ஓட்டுனர் முருகேசன் அவர்கள் ஓட்டும் பேருந்து ஒன்றை தினமும் கழுவி, அதில் டிவி, மியூசிக் சிஸ்டம் பொருத்திக்கொள்ள காரைக்குடி மண்டல பொது மேலாளரிடம் அனுமதிகேட்டனர். இதற்கு பொது மேலாளர் ஓகே சொன்னதும், முருகேசன்,ரங்கராஜ், கண்ணன், பாரதிதாசன் ஆகியோர் இணைந்து அரசு பேருந்தை அழகு படுத்தி, தினமும் பணிக்கு செல்லும் முன் பேருந்தை கழுவினர்.

பேருந்தின் பல வசதிகள் மற்றும் அழகை கண்டு அந்த பேருந்தில் கலெக்‌ஷன் அள்ளியது. இதனால் உயர் அதிகாரியும் மகிழ்ச்சி அடைந்தார். இந்த விஷயத்தை கேள்விபட்ட போக்குவரத்துதுறை அமைச்சர் பேருந்தை அழகுபடுத்திய ஊழியர்கள் 4 வருக்கும், அதற்கு அனுமதி அளித்த உயர் அதிகாரி ஒருவருக்கு தலா ரு. 5000 சிறப்பு பரிசாக வழங்க உத்தரவிட்டுள்ளார். இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது மற்ற ஊழியர்களுக்கும் தூண்டுகோளாக இருக்கும் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி