ஆப்நகரம்

தூத்துக்குடியில் ஓரிரு நாளில் அமைதி திரும்பும்: சிறப்பு அதிகாரி உறுதி

தூத்துக்குடியில் ஓரிரு நாளில் அமைதி திரும்பும் என்று சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 24 May 2018, 12:49 pm
தூத்துக்குடியில் ஓரிரு நாளில் அமைதி திரும்பும் என்று சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil maxresdefault


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தபோது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.

தடைகளை மீறி போராட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கானோர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நுழைந்தனர். அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தூத்துக்குடியில் ஓரிரு நாளில் அமைதி திரும்பு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். “15 எஸ்பிக்கள் தலைமையிலான குழு ரோந்துபணியில் ஈடுபட்டுள்ளது. பேருந்துகளையும் விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடைகளை திறக்க வர்த்தக சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறோம்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி