ஆப்நகரம்

உள்ளாட்சி பதவிக்காலம் நாளையுடன் நிறைவு: தனி அதிகாரிகளை நியமிக்க ஏற்பாடு

தமிழகத்தில் உள்ளாட்சி பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைய உள்ளதை அடுத்து, தனி அதிகாரிகள் நியமிக்க தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

TNN 23 Oct 2016, 5:52 pm
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைய உள்ளதை அடுத்து, தனி அதிகாரிகள் நியமிக்க தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
Samayam Tamil special officers will be appointed due to local body tenure ends tomorrow
உள்ளாட்சி பதவிக்காலம் நாளையுடன் நிறைவு: தனி அதிகாரிகளை நியமிக்க ஏற்பாடு


தமிழகத்தில் உள்ளாட்சிக்கான தேர்தல் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்றது. 5 ஆண்டுகள் நிறைவடைய உள்ளதை அடுத்து, உள்ளாட்சிக்கு மீண்டும் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உள்ளாட்சி பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைய உள்ளது.

ஆனால் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்புகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதையடுத்து உள்ளாட்சி பதவியிடங்களை நிர்வகிக்க, தனி அதிகாரிகளை நியமிக்க பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பிறப்பித்தார். இதன்படி மாநகராட்சிகளை மாநகர ஆணையர்களும், நகராட்சிகளை நகராட்சி ஆணையர்களும், பேரூராட்சிகளை செயல் அலுவலர்களும் நிர்வகிக்க உள்ளனர்.

Special officers will be appointed due to local body tenure ends tomorrow.

அடுத்த செய்தி