ஆப்நகரம்

வேற லெவல் பாதுகாப்பு ஏற்பாடுகள்.. மாமல்லபுரத்தில் மீண்டும் மீண்டும் அதிகாரிகள் ஆய்வு

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், இந்திய பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், வரும் 11ம் தேதி முதல் 12ம் தேதி வரை சந்திக்க உள்ளனர்.

Samayam Tamil 8 Oct 2019, 11:00 pm
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், இந்திய பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், வரும் 11ம் தேதி முதல் 12ம் தேதி வரை சந்திக்க உள்ளனர்.
Samayam Tamil special officials inspected mamallapuram where modi and xi jinbings site seeing takes place
வேற லெவல் பாதுகாப்பு ஏற்பாடுகள்.. மாமல்லபுரத்தில் மீண்டும் மீண்டும் அதிகாரிகள் ஆய்வு


இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்படுவதுடன், பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

இந்த சந்திப்பையொட்டி மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தபட்டு, 7 அடுக்கு பாதுகாப்பு வளையத்தின் கீழ் ஒட்டுமொத்த மாமல்லபுரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சந்திப்பிற்கு பிறகு சுற்றிப்பார்க்கப் போகும் இடங்களான அர்ஜணன் தபசு, வெண்ணெய்ப்பாறை ஆகிய பகுதிகளில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி மற்றும் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் அசோக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இவர்களுடன், டெல்லியில் இருந்து வந்திருந்த சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகளும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இவர்களுடன் இந்திய தூர்தர்க்ஷன் அதிகாரிகள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் வீடியோ கவரேஜ் கேமராக்கள் பொருத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், மோப்ப நாய்களை கொண்டு ஆய்வு செய்தும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

அடுத்த செய்தி