ஆப்நகரம்

எம்.எல்.ஏ.,க்கள் சுயமாக வாக்களிக்க ஜனாதிபதி ஆட்சி அவசியம்: ஆச்சார்யா !

தமிழக சட்டசபையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்எல்ஏக்கள் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டுமானால் ஜனாதிபதி ஆட்சி இருந்தால் மட்டுமே சாத்தியம் என மூத்த வக்கீல் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

TOI Contributor 18 Feb 2017, 12:07 pm
பெங்களூரு: தமிழக சட்டசபையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்எல்ஏக்கள் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டுமானால் ஜனாதிபதி ஆட்சி இருந்தால் மட்டுமே சாத்தியம் என மூத்த வக்கீல் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sr adcovate acharya seeks governor rule in tamil nadu for 3 month
எம்.எல்.ஏ.,க்கள் சுயமாக வாக்களிக்க ஜனாதிபதி ஆட்சி அவசியம்: ஆச்சார்யா !


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்து தினம் தினம் ஒரு பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக இன்று தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

ஆனால், இந்த வாக்கெடுப்பில் எம்.எல்.ஏ.,க்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியாது என்றும் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வந்திருக்க வேண்டும் என வக்கீல் ஆச்சார்யா கூறியுள்ளார்.

தவிர, தமிழக எம்எல்ஏக்கள் சுயமாக சிந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க ஜனாதிபதி ஆட்சி அவசியம் என குறிப்பிட்டுள்ளார் ஆச்சார்யா. தற்போது எம்எல்ஏக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் நிலை தமிழகத்தில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். .

Sr. Adcovate Acharya seeks Governor Rule in Tamil Nadu for 3 month.

அடுத்த செய்தி