ஆப்நகரம்

Gaja Cyclone: தானே புயலை விட கஜா புயல் பாதிப்பை ஏற்படுத்துமா? - ரமணன் பதில்

சென்னை : வர்தா, தானே புயலை விட கஜா புயல் மிக அதிக பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு முன்னாள் வானிலை ஆய்வாளர் எஸ்.ஆர் ரமணன் பேட்டியளித்துள்ளார்.

Samayam Tamil 13 Nov 2018, 9:54 am
சென்னை : வர்தா, தானே புயலை விட கஜா புயல் மிக அதிக பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு முன்னாள் வானிலை ஆய்வாளர் எஸ்.ஆர் ரமணன் பேட்டியளித்துள்ளார்.
Samayam Tamil ramanan


கஜா புயல் குறித்து தமிழ் தொலைக்காட்சி ஒன்றிற்க்கு அவர் அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ரமணன் பேசியதாவது :
கஜா புயல் தென் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த புயல் சென்னை - நாகை இடையே கரையை கடக்கும். கணினி சார்ந்த கணிப்பின் படி கடலூருக்கு தெற்கே கடக்கும் என தெரிகிறது. தொடர்ந்து செயற்கை கோள் மற்றும் ரேடார் கணிப்பின்படி தொடர்ந்து எங்கு கஜா புயல் கடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ரெட் அலர்ட் ஏன்?
கடலோரப் பகுதி மக்கள், தாழ்வான இடங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக தான் அலர்ட் கொடுக்கப்படுகிறது.
கஜா புயலால் காற்றின் வேகம் போகப் போக அதிகரிக்கும், கன மழை கண்டிப்பாக இருக்க வாய்ப்புள்ளது. கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.

புயலிலிருந்து எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்வது?

வர்தா, தானே புயலை விட ஆபத்தானதா?

இதற்கு முன் வந்த அதி தீவிர புயலை விட இது குறைவு தான். இது ஒரு புயல் அவ்வளவு தான். இருப்பினும் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டியது எப்போதும் அவசியம்.

காற்று பலமாக இருக்கும் மரங்கள் சாய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் புயல் கடந்த பின்னரும் மக்கள் மிக எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என ரமணன் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி