ஆப்நகரம்

தமிழக மீனவர்களை துரத்திய இலங்கை மீனவர்கள்

நாகை மாவட்டத்தின் கோடியக்கரை அருகே இன்று மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மீனவர்கள் அவர்களைத் துரத்தியடித்தனர்.

TNN 6 Jul 2017, 8:50 am
நாகை மாவட்டத்தின் கோடியக்கரை அருகே இன்று மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மீனவர்கள் அவர்களைத் துரத்தியடித்தனர்.
Samayam Tamil sri lanka against tn fishermen
தமிழக மீனவர்களை துரத்திய இலங்கை மீனவர்கள்


நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழ மீனவர்களை இலங்கை மீனவர்கள் விரட்டியடித்துள்ளனர். இதனால், தமிழக மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரைக்குத் திரும்பினர்.

இதேபோல, வேதாரண்யத்திலும் நேற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்கள் கரை திரும்பவில்லை. இதனால், அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இதனிடையே, ராமேஸ்வரம் மாவட்டம் நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி