ஆப்நகரம்

தமிழக மீனவர்கள் 8 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

சிறை பிடிக்கப்பட்ட 8 மீனவர்களையும் மீட்க அவர்களுடைய குடும்பத்தினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், அவர்களை விடுதலை செய்யுமாறு இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 10 Jan 2019, 1:15 pm
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 8 தமிழக மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil fisher-man-killed-1


கடந்த ஜனவரி 5ஆம் தேதி ஜெகதாப்பட்டினத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகு என்ஜின் பழுது காரணமாக நடுக்கடலில் தத்தளித்தபோது, அதில் இருந்த சதிஷ் (33), அஜீத் (24), தர்மராஜ் (47), ராமச்சந்திரன் (45) ஆகிய 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

ஜனவரி 7ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஜோசப் (56), ராணிஸ்சன் (36), மணிகண்டன் (33), ராஜா (34), விஜி (30) ஆகிய 4 பேரும் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
சிறை பிடிக்கப்பட்ட 8 மீனவர்களையும் மீட்க தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்று அவர்களுடைய குடும்பத்தினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 8 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி