ஆப்நகரம்

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு!

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 19 Sep 2019, 4:25 pm
நெடுந்தீவு அருகே, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்நிலையில், கைதான மீனவர்களை அக்டோபர் மாதம் 3-ம் தேதி வரை சிறையிலடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
Samayam Tamil தமிழக மீனவர்கள் 5 பேர் படகுடன் சிறைபிடிப்பு- இலங்கை கடற்படையினர் அட்டூழியம்!
தமிழக மீனவர்கள் 5 பேர் படகுடன் சிறைபிடிப்பு- இலங்கை கடற்படையினர் அட்டூழியம்!


புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை மீன்வளத் துறை அனுமதியுடன், 80 விசைப்படகுகளில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

இதில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த விஜயேந்திரன் (48), ராமு (49), சின்னையன் (40), ஜேசு (39) உள்பட 5 மீனவர்கள், நேற்று நள்ளிரவு, யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே கோவிலம் கலங்கரை விளக்க கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தில் உச்சபட்ச அபராதம் பெறும் முதல் பெண்..!

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி 5 மீனவர்களையும் கைது செய்து, விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமிற்க்கு அழைத்து சென்றனர். அவர்களது படகையும் சிறைப்பிடித்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பின் மீனவர்கள் யாழ்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து பின் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி யூட்சன், மீனவர்களை அக்டோபர் மாதம் 03ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே கைதான மீனவர்களை மீட்க வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய மோட்டார் வாகன சட்டம் : அபராதமா, வழிப்பறியா? - லாரி உரிமையாளர்கள் கேள்வி

கடந்த சில ஆண்டுகளாக தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசின் நடவடிக்கைகள் கடுமையாகியுள்ளன. தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டால், கண்டிப்பாக 3 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. அடுத்தகட்டமாக, எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு ரூ.1.50 கோடி வரை அபராதம் விதிக்கும் சட்டத்தை இலங்கை அரசு கொண்டு வந்து நிறைவேற்றியது.

இதனால் தூத்துக்குடி முதல் நாகப்பட்டினம் வரையிலான கிழக்குக் கடற்கரையோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழக்கும் தருவாயில் பரிதவித்து வருகின்றனர்.

மதம், மொழி பிரச்சினைகளை எழுப்பி மக்களின் கவனத்தை திசை திருப்பும் அமித் ஷா!

எனவே மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கண்டு, தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்கள் இரு தரப்பு கடல் பகுதிகளில் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் மீன் பிடிக்க வகை செய்ய வேண்டும் என மீனவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி