ஆப்நகரம்

துப்பாக்கி முனையில் மிரட்டல்; ஓடிவந்த தமிழக மீனவர்கள் - ஒருவேளை இதுதான் காரணமோ?

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி விரட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 18 Oct 2020, 12:58 pm
சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையால் கடந்த சில வாரங்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இந்நிலையில் நேற்று மீண்டும் கடலுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் புறப்பட்டுச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, திடீரென இலங்கை கடற்படை வந்தனர். அவர்கள் தமிழக மீனவர்களை நோக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர். தொடர்ந்து அத்துமீறி மீன்பிடிக்க வருகின்றனர். நிலைமை விபரீதமாகிவிடும் என்று எச்சரித்துள்ளனர்.
Samayam Tamil Tamil Nadu Fishermen


பின்னர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சி மீன்பிடிக்காமல் வேகமாக கரைக்கு திரும்பியுள்ளனர். இதனால் பல லட்ச ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர். கடந்த சில மாதமாக இலங்கை ராணுவத்தினரின் அராஜக நடவடிக்கைகள் ஏதும் இல்லாமல் இருந்தன.

ஆனால் தற்போது மீண்டும் தலைதூக்கி இருப்பது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான ’800’ல் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முரளிதரனுக்கு எதிரான குரல்கள் வலுத்து வருகின்றன. இதனால் தான் இலங்கை ராணுவம் மீண்டும் தங்கள் அத்துமீறலை தொடங்கியுள்ளனரா என்று கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.

தமிழக இளைஞர்ளுக்கு உடனடி வேலைவாய்ப்பு; மு.க.ஸ்டாலின் சொன்ன சூப்பர் ஐடியா!

இந்த சூழலில் இலங்கை கடற்படையின் நடவடிக்கைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலால் மீனவர்களுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படையினர் அத்துமீறல் சில மாதங்களாக குறைந்திருந்த நிலையில், மீண்டும் அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது.

தமிழக மீனவர்கள் வங்கக் கடலில் நிம்மதியாக மீன் பிடிப்பதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி