ஆப்நகரம்

மாமுல் கேட்டு மிரட்டும் தமிழக போலீஸ்; இலங்கை பெண் அகதி வழக்கு

போலீசார் பணம் கேட்டு மிரட்டுவதாக தொடர்ந்த ராமநாதபுரம் இலங்கை பெண் அகதியின் வழக்கில், பதிலளிக்க துணை கலெக்டர், காவல்துறை அதிகாரிகளுக்கு மதுரை உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது.

TOI Contributor 19 Dec 2017, 7:35 am
போலீசார் பணம் கேட்டு மிரட்டுவதாக தொடர்ந்த ராமநாதபுரம் இலங்கை பெண் அகதியின் வழக்கில், பதிலளிக்க துணை கலெக்டர், காவல்துறை அதிகாரிகளுக்கு மதுரை உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil sri lankan woman refugee accuses tn q branch police of harassing her
மாமுல் கேட்டு மிரட்டும் தமிழக போலீஸ்; இலங்கை பெண் அகதி வழக்கு


ராமநாதபுரம் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் உதயகலா. வறுமையில் வாடும் இவர், தன்னுடைய பிள்ளைகளை படிக்க வைப்பதற்காக, முகாமில் கேண்டீன் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், உதயகலாவிடம் போலீசார் தொடர்ந்து மாமுல் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், பணம் கொடுக்கவில்லை என்றால் பொய்வழக்கு போட்டுவிடுவதாக மிரட்டுவதாகவும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து ராமநாதபுரம் மண்டபம் முகாம் சிறப்பு துணை ஆட்சியர், கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் ஆகியோ இரு வாரங்களுக்குல் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி