ஆப்நகரம்

ஸ்ரீ ஆதி சிவலிங்காச்சாரிய பீடத்தின் மடாதிபதி ஸ்ரீ சிவசண்முக ஞானாச்சார்ய குரு ஸ்வாமிகள் காலமானார்!

திருவண்ணாமலை: சிவசண்முக ஞானாச்சாரிய குரு சுவாமிகள் இன்று காலமானார்.

Samayam Tamil 26 Dec 2018, 8:51 pm
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஸ்ரீனந்தல் கிராமத்தில் அகில பாரத விஸ்வகர்ம ஆதினம் அமைந்துள்ளது. இந்த ஆதி சிவலிங்காச்சாரிய ஆதீனத்தின் 64-வது பீடாதிபதியாக ஸ்ரீ சிவசண்முக ஞானாச்சாரிய குரு சுவாமிகள் இருந்து வந்தார்.
Samayam Tamil Swamy


இவர் இந்திய அளவில் விஸ்வகர்ம சமூகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் தலைவர் என்று அழைக்கப்பட்டு வந்தார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த இவர், இன்று காலை 11 மணியளவில் காலமானார்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், அகில பாரத விஸ்வகர்ம ஜெகத்குரு, நெல்லை ஸ்ரீ மத் பரசமய கோளரிநாதர் மடத்தின் 38வது பீடாதிபதியும், ஸ்ரீனந்தல் ஸ்ரீ ஆதி சிவலிங்காச்சாரிய பீடத்தின் 64வது மடாதிபதியுமான ஸ்ரீ சிவசண்முக ஞானாச்சார்ய குரு ஸ்வாமிகள்,

இன்று காலை 11:00 மணியளவில் ஆதி சிவலிங்க குருமூர்த்தி நீலகண்ட பரமாச்சார்ய ஸ்வாமிகளிடம் ஐக்கியமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி