ஆப்நகரம்

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை விடியவிடிய ரோந்து

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை கப்பல்கள் விடியவிடிய ரோந்தில் ஈடுபட்டதாக மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

TNN 19 Mar 2017, 8:29 am
கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை கப்பல்கள் விடியவிடிய ரோந்தில் ஈடுபட்டதாக மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.
Samayam Tamil srilanka navy atrocity fisherman compliant
கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை விடியவிடிய ரோந்து


இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர் பிரிட்ஜோ சில நாட்களுக்கு முன்பு தூப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனை தொடர்து தமிழகத்தில் பெரிய அளவில் போரட்டம் நடைப்பெற்றது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்தநிலையில் 11 நாட்களுக்கு பின்னர் தமிழக ராமேஸ்வர மீனவர் நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை கப்பல்கள் விடியவிடிய ரோந்தில் ஈடுபட்டதாக மீனவர்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து தமிழக ராமேஸ்வர பகுதி மீனவர்கள் மீன் பிடிக்காமல் கரைக்கு திரும்பினார்கள். இதனால் மீனவர்களுக்கு ரூ.2 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

srilankan navy atrocity : fisherman compliant

அடுத்த செய்தி