ஆப்நகரம்

ஆழ்கடலில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு இலங்கை அனுமதி

இலங்கையின் ஆழ்கடலில் மீன்பிடிக்க 250 தமிழக மீனவர்களுக்கு அனுமதி வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

TOI Contributor 13 Jul 2016, 4:40 am
இலங்கையின் ஆழ்கடலில் மீன்பிடிக்க 250 தமிழக மீனவர்களுக்கு அனுமதி வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
Samayam Tamil srilankan government allows indian fisherman
ஆழ்கடலில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு இலங்கை அனுமதி


தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. தற்போது இலங்கை சிறையில் சுமார் 70 தமிழக மீனவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே இலங்கை அரசின் அத்துமீறலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், மீனவர் கைதுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு தொடர்ந்து கடிதம் எழுதிவருகிறார். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று இலங்கை அரசுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில் இலங்கையின் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிக்க 250 தமிழக மீனவர்களுக்கு அனுமதி அளிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. மீனவர் பிரச்னைக்கு தற்காலிக தீர்வாக இந்த முடிவை இலங்கை அரசு எடுத்துள்ளது என்று இலங்கை அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி