ஆப்நகரம்

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்!

ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 27 Nov 2018, 12:04 pm
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்!
கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்!


ராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று விசைப் படகுகளில் கடலுக்கு சென்றனர். இவர்கள் இன்று அதிகாலை கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி, 30-க்கும் மேற்பட்ட படகுகளை சுற்றி வளைத்தனர்.

அத்துடன் விடாமல் படகுகளில் ஏறிய இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலைகளையும், மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர். இலங்கை கடற்படையால் சேதப்படுத்தப்பட்ட மண்டபம் மீனவர்கள் சென்ற படகு கடலில் மூழ்கியது. அதில் இருந்த மீனவர்கள் நீண்ட நேரம் போராடி உயிர் தப்பினர். இதையடுத்து மீனவர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக கரை திரும்பினர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினர் எங்களை விரட்டியடிப்பது, வலைகளை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்திய எல்லையில் மீன் பிடித்தாலும் இலங்கை கடற்படையினரின் தொந்தரவு உள்ளது. இதற்கு மத்திய அரசுதான் தீர்வு காணவேண்டும் என்றனர்.

அடுத்த செய்தி