கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று மீன்பிடிக்கச் கடலுக்கு சென்றனர். இவர்கள் இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்துவந்த, இலங்கை கடற்படையினர் திடீரென தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
மேலும் துப்பாக்கி முனையில், மீனவர்களின் வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்திய இலங்கை கடற்படையினர், அவற்றை கடலில் தூக்கியெறிந்து அட்டூழியம் செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் மீன்பிடிக்காமல் பாதியிலே கரை திரும்பினர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினர் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க முடியாதவாறு கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி, மீன்பிடிக்க ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று மீன்பிடிக்கச் கடலுக்கு சென்றனர். இவர்கள் இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்துவந்த, இலங்கை கடற்படையினர் திடீரென தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
மேலும் துப்பாக்கி முனையில், மீனவர்களின் வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்திய இலங்கை கடற்படையினர், அவற்றை கடலில் தூக்கியெறிந்து அட்டூழியம் செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் மீன்பிடிக்காமல் பாதியிலே கரை திரும்பினர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினர் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க முடியாதவாறு கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி, மீன்பிடிக்க ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.