வேலூர் சங்கரன்பாளையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இது கட்சியின் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் சத்திய நாராயணன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிரணி மாநில ஒருங்கிணைப்பாளரும், நடிகையுமான ஸ்ரீபிரியா கலந்துகொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.
பின்னர் மகளிரணி மாநில ஒருங்கிணைப்பாளர் நடிகை ஸ்ரீபிரியா செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ் நாட்டில் இரு மாற்றங்கள் வரவேண்டும் என்பதற்காக கட்சியை துவங்கியுள்ளோம்.
தமிழகத்தில் அரசியல் மாற்றம் தான் குறிக்கோள். அனைத்து மாவட்டங்களிலும் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகங்கள் திறக்கப்பட்டு வருகிறது. விரைவில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யார் வேட்பாளர்கள், எத்தனை தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்பதை கட்சியின் தலைவர் கமல் அறிவிப்பார்.
இந்திய ராணுவ வீரர்கள் காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டது, அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. இது நாட்டிற்கு பேரிழப்பாகும். மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிரணி மாநில ஒருங்கிணைப்பாளரும், நடிகையுமான ஸ்ரீபிரியா கலந்துகொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.
பின்னர் மகளிரணி மாநில ஒருங்கிணைப்பாளர் நடிகை ஸ்ரீபிரியா செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ் நாட்டில் இரு மாற்றங்கள் வரவேண்டும் என்பதற்காக கட்சியை துவங்கியுள்ளோம்.
தமிழகத்தில் அரசியல் மாற்றம் தான் குறிக்கோள். அனைத்து மாவட்டங்களிலும் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகங்கள் திறக்கப்பட்டு வருகிறது. விரைவில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யார் வேட்பாளர்கள், எத்தனை தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்பதை கட்சியின் தலைவர் கமல் அறிவிப்பார்.
இந்திய ராணுவ வீரர்கள் காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டது, அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. இது நாட்டிற்கு பேரிழப்பாகும். மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.