ஆப்நகரம்

ஸ்ரீரங்கம் கோயில் சிலை திருட்டு வழக்கு: விசாரணை துவங்கிய போலீஸ்!

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் சிலை கடத்தல் விவகாரத்தில் சிறப்பு பிரிவினர் திரீரென நேரடியாக ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

Samayam Tamil 6 Sep 2018, 10:40 pm
திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் சிலை கடத்தல் விவகாரத்தில் சிறப்பு பிரிவினர் திரீரென நேரடியாக ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
Samayam Tamil 10


திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலின் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளதாக, பழங்கால பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ரங்கராஜ நரசிம்மன் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த சிலைகடத்தல் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள், ஆரம்பக் கட்ட விசாரனை நடத்தி ஆறு வாரத்துக்குள் அறிக்கை அளிக்க உத்திரவிட்டனர்.

இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மானிக்கவேல், ஏ.டி.எஸ்பி. ராஜாராம் ஆகியோர் ஸ்ரீரங்கம் கோயில் மூலஸ்தானம், சக்கரத்தாழ்வார் சன்னதி, ஆயிரங்கால் மண்டபம் இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.

பின் வெளியே வந்த அதிகாரிகள் 25 சதவீதம் விசாரணை முடிந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அடுத்த செய்தி