ஆப்நகரம்

ஜீயரின் உண்ணாவிரத போரட்டத்துக்கு எதிராக உண்ணும் ஆர்பாட்டம்! அதுவும் மாட்டுக்கறி!!

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜீயர் உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நேரத்தில், கோவையில், அவருக்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உண்ணும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 9 Feb 2018, 2:52 pm
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜீயர் உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நேரத்தில், கோவையில், அவருக்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உண்ணும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil srivilliputtur ramanujars hunger strike against sadagopam in coimbatore
ஜீயரின் உண்ணாவிரத போரட்டத்துக்கு எதிராக உண்ணும் ஆர்பாட்டம்! அதுவும் மாட்டுக்கறி!!


ஆண்டாள் விவகாரத்தில், கவிஞர் வைரமுத்து ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலுக்கு வந்து மன்னிப்பு கேட்கும் வரை உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக சடகோப ராமானுஜர் ஜீயர் அறிவித்திருந்தார்.

அதன்படி, நேற்று துவங்கிய உண்ணாவிரத ஆர்ப்பாட்டம், இன்று இரண்டாவது நாளாக துவங்கியது. அப்போது, கோவை காந்திபுரம் அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உண்ணும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அக்கழகத்தின் பொதுச்செயலாளர் கு. ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த உண்ணும் ஆர்ப்பாட்டத்தில் மாட்டுக்கறி சமைத்து உண்டனர்.

தொடர்ந்து பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, உடலை வருத்தி உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதன் பெயரில், உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவதாக ஜீயர் அறிவித்தார்.

அடுத்த செய்தி