ஆப்நகரம்

எஸ்.எஸ்.ஐ, சிபிஐக்கு பாசிடிவ் - கொரோனாவிற்குள் சிக்கும் சாத்தான்குளம் விசாரணை!

தந்தை - மகன் கஸ்டடி மரணம் குறித்த விசாரணையில் தொடர்புடையவர்கள் பலருக்கும் அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 24 Jul 2020, 10:59 am
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறை கஸ்டடியில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னீக்ஸ் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி டெல்லியில் இருந்து கடந்த 10ஆம் தேதி 8 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு மதுரை வந்தனர்.
Samayam Tamil Sathankulam CBI Investigation


இதையடுத்து சாத்தான்குளம் காவல் நிலையம், கோவில்பட்டி கிளைச் சிறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் கைது செய்யப்பட்ட 5 காவலர்களை விசாரித்தனர்.

என்ன ஆச்சு மதுரைக்கு? மீண்டும் உயரும் எண்ணிக்கை, எதனால்?

இதனைத் தொடர்ந்து மேலும் 3 காவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சூழலில் சாத்தான்குளம் விசாரணையில் ஈடுபட்டு வந்த 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கடந்த 22ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் காரணமாக அனைத்து அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் மேலும் 2 சிபிஐ அதிகாரிகள் என மொத்த 4 அதிகாரிகளுக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அடிச்சு நொறுக்கிய மழை: மகிழ்ச்சியில் நனைந்த மக்கள்!

இந்நிலையில் தந்தை - மகன் கொலை வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரை-க்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் சாத்தான்குளம் விசாரணை கொரோனாவிற்குள் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி