ஆப்நகரம்

கார்களை திருடிய நிசான் ஆட்டோமோட்டிவ் இந்தியா நிறுவனத்தின் ஊழியர்கள் கைது !

புதிதாக தயாரிக்கப்பட்ட எஸ்யுவி கார்களை, திருடிய நிசான் ஆட்டோமோட்டிவ் இந்தியா நிறுவனத்தின் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 10 Sep 2018, 12:24 pm
புதிதாக தயாரிக்கப்பட்டஎஸ்யுவி கார்களை, திருடிய நிசான் ஆட்டோமோட்டிவ் இந்தியா நிறுவனத்தின் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil 65747671


நிசான் ஆட்டோமோட்டிவ் இந்தியா என்ற கார் நிறுவனத்தின் ஊழியர்கள் ரூ.25 லட்சம் மதிப்பிலான இரண்டு கார்களைதிருடி சென்றுள்ளனர்.

இந்தசம்பவம் தொடர்பாககாவல்துறையினர் தரப்பு தெரிவித்த தகவல் பின்வருமாறு: குன்றத்தூரை சேர்ந்த மாரிமுத்து என்ற மொஹமத் அசாரப்(28) மற்றும் தண்டயார்பேட்டையை சேர்ந்த அருண் குமார் (27) ஆகியோர் ஒரகடம் பகுதியில் உள்ள நிசான் ஆட்டோமோட்டிவ் இந்தியா நிறுவனத்தில் கடந்த7 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் ரூ.25 லட்சம் மதிப்புள்ள இரண்டு எஸ்யுவி கார்களை திருடியதுடன் அதற்கு போலி நம்பர் பிளேட்டை வாங்கியுள்ளனர்.

மேலும் அதில் ஒரு காரை குமார் என்பவருக்கு விற்றுள்ளனர். அடுத்த காரை விற்பதற்கு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்நிலையில் இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி