ஆப்நகரம்

கொரோனா மரணத்தில் 'பொய்க்கணக்கு', முதல்வர் மன்னிப்பு கேட்கவேண்டும் - ஸ்டாலின்

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கையில் பொய் கணக்கு போட்டுள்ள முதல்வர் பழனிசாமி மன்னிப்பு கேட்கவேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

Samayam Tamil 23 Jul 2020, 1:32 pm
தமிழகத்தில் கொரோனா காலூன்றிய காலத்திலேயே ஒன்று இரண்டு என்ற எணிக்கையில் இருந்த பலி எண்ணிக்கை பத்து, இருபது என லேசாக உயர தொடங்கியது. குறிப்பாக சென்னையில் 500 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்தபோதும், பலி எண்ணிக்கையானது பத்து என்ற எணிக்கையில் அடங்கியதால், அதுகுறித்த சந்தேகங்கள் பலரிடம் எழுந்திருக்கலாம்.
Samayam Tamil mk stalin


ஆனால், சென்னையில் கட்டுக்கடங்காமல் கொரோனா பரவிய நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தபோதும், இறப்பு மற்றும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கையை தினந்தோறும் வெளியிட்டு வரும் அரசு, இதில் எந்த ஒளிவு, மறைவும் இல்லை என்று விளக்கம் அளித்தது.

ஆனால், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 444 பேருடைய விவரம் விடுபட்டுவிட்டததாக கூறி, பலி எண்ணிக்கையில் அதை சேர்த்துள்ளது அரசு. இதனால் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள அரசை எதிர்க்கட்சி உள்ளிட்ட பலரும் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு வீடியோ வெளியிட்டு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் இடைத்தேர்தல் எப்போது? - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு!

அந்த வீடியோவில், '' மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை பாதிப்பு எண்ணிக்கை விவரத்தை வெளியிட்டு வரும் அரசு, தற்போது உயிரிழப்பு பட்டியலில் 444 பேரை சேர்க்கிறது. இதனால் மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை பொய்யான தகவலை அரசு அளித்து வருகிறது. கணக்கில் வராத மரணங்கள் என்று ஜூன் மாதத்திலேயே நான் பேச தொடங்கினேன், ஆனால் மரணத்தை வைத்து அரசியல் செய்வதாக என்னை ஆளுங்கட்சி விமர்சித்து விட்டது. மரண விவகாரத்தில் முதல்வர் பொய் சொல்லிருப்பதால், அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்'' என ஸ்டாலின் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி