ஆப்நகரம்

ஊழலை பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு அருகதை இல்லை: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

ஊழலை பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு அருகதை இல்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சாடியுள்ளார்.

Samayam Tamil 25 Feb 2019, 11:27 am
ஊழலை பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு அருகதை இல்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சாடியுள்ளார்.
Samayam Tamil ஊழலை பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு அருகதை இல்லை: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!
ஊழலை பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு அருகதை இல்லை: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் நகர அதிமுக சார்பில் தான்தோன்றி மலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகர அதிமுக செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசுகையில்; அதிமுக கூட்டணி அமைத்தவுடன் ஸ்டாலினுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. திமுக கூட்டணியில் இருக்கும் வைகோ, ஸ்டாலினை முதல்வர் ஆக விட மாட்டார்.

ஊழலை பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு அருகதை இல்லை. ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஏதேதோ உளரிக் கொண்டு இருக்கிறார். திமுக ஆட்சிக் காலத்தில் என்ன செய்தார்கள், அதிமுக ஆட்சியில் என்ன செய்தோம் என்று பேசி விவாதிக்க தயாராக இருக்கிறேன்.

அடுத்த பொதுத் தேர்தல் வருவதற்குள் குடிநீர் பிரச்சினை, வடிகால் வசதி முழுமையாக ஏற்படுத்தி கொடுத்து விட்டுத் தான் உங்களை சந்திக்க வருவேன். தமிழகம் முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணி முடிவடைந்த உடன் அனைவருக்கும் 2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

அடுத்த செய்தி