ஆப்நகரம்

அறிவாலயத்தில் தொடங்கியது விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டம்

அண்ணா அறிவாலயத்தில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில், விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

TNN 13 Oct 2016, 12:07 pm
சென்னை: அண்ணா அறிவாலயத்தில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில், விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
Samayam Tamil stalin leads discuss with farmers in anna arivalayam starts
அறிவாலயத்தில் தொடங்கியது விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டம்


காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது. அதேசமயம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசும் எதிர்ப்பு காட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், காவிரி விகாரம் தொடர்பாக, குடியரசு தலைவரை சந்தித்து முறையிடுவது குறித்த ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.

எதிர்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான ஸ்டாலின் தலைமையிலான இந்த ஆலோசனை கூட்டத்தில், பி. ஆர் பாண்டியன், அய்யாக்கண்ணு, உள்ளிட்ட விவசாய சங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக, இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில், உச்சநீதிமன்றம் தீர்ப்பு, தமிழகத்திற்கு சாதகமாக வந்துள்ளது. எனவே குடியரசுத் தலைவரிடம் முறையிடுவதற்கான முழு உரிமை உள்ளதாக தெரிவித்தார்.

மேட்டூர் அணை நீர் தற்காலிகமானதே, 130 நாளுக்கான நீர் தேவை விவசாயிகளுக்கு உள்ளது, எனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நெல்லுக்கு ரூ.25,000, கரும்புக்கு ரூ.50,000, வாழைக்கு ரூ.1 லட்சம் வரை மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Stalin leads Discuss with Farmers in Anna arivalayam starts #CauveryIssue

அடுத்த செய்தி