ஆப்நகரம்

திமுக பேச்சாளர்களுக்கு ஸ்டாலின் இட்ட கட்டளை

திமுக பேச்சாளர் கூட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனது கட்சி பேச்சாளர்களுக்கு முக்கிய கட்டளை இட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

TNN 2 Mar 2017, 9:39 pm
சென்னை : திமுக பேச்சாளர் கூட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனது கட்சி பேச்சாளர்களுக்கு முக்கிய கட்டளை இட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Samayam Tamil stalin order to his party speaker
திமுக பேச்சாளர்களுக்கு ஸ்டாலின் இட்ட கட்டளை


திமுக சார்பில் பேச்சாளர்கள் கூட்டம் சென்னை தி.நகரில் சில தினங்களுக்கு முன்னர் நடைப்பெற்றது, இந்த கூட்டத்திற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். . மேலும் மாநிலம் முழுவதிலிமிருந்து 500 பேர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் திமுக பேச்சாளர்கள் பொருளாதார பிரச்சனையில் சிக்கியிருப்பதாக பலர் மு.க.ஸ்டாலினிடம் புகார் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின் “ திமுக பேச்சாளர்களின் கோரிக்கைகளை பரிசிலிக்கும்.சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா முதல் குற்றவாளி. அவரது மரணம் மர்மமானது.

ஜெ., கொலை செய்தது சசிகலதான் என ஆணித்தரமாக நீங்கள் அனைவரும் பேச வேண்டும். அதற்கு உடந்தையாக இருந்தது ஓ.பி.எஸ் என்பதை மக்கள் மனதில் தெளிவாக பதிய வையுங்கள். மருத்துவமனையில் ஜெ. இருந்த போது, ஓ.பி.எஸ் அமைதியாகவே இருந்தார். எனவே இதுபற்றி எல்லா மேடைகளிலும் பேசுங்கள். உங்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும்” என்று பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Stalin order to his party speaker

அடுத்த செய்தி