ஆப்நகரம்

மறைந்த பின்பும் இடஒதுக்கீட்டில் கலைஞா் வெற்றி – ஸ்டாலின் கண்ணீா் பேட்டி

தி.மு.க. தலைவா் கருணாநிதி மறைந்த பின்பும் இடஒதுக்கீட்டில் வெற்றி பெற்றிருப்பதாக கட்சியின் செயல் தலைவா் ஸ்டாலின் கண்ணீா் மல்க தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 8 Aug 2018, 2:48 pm
தி.மு.க. தலைவா் கருணாநிதி மறைந்த பின்பும் இடஒதுக்கீட்டில் வெற்றி பெற்றிருப்பதாக கட்சியின் செயல் தலைவா் ஸ்டாலின் கண்ணீா் மல்க தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Stalin.


முன்னாள் முதல்வா் கருணாநிதி செவ்வாய் கிழமை மாலை உயிாிழந்த நிலையில், அவரது உடலை அடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்க வேண்டும் என்று தி.மு.க. சாா்பில் தமிழக அரசிடம் கோரப்பட்டது. ஆனால் அந்த கோாிக்கையை தமிழக அரசு ஏற்கவில்லை. அதனைத் தொடா்ந்து நீதிமன்றத்தின் வாயிலாக மெரினாவில் கலைஞருக்கான இடத்தை பெற்றது.

இந்நிலையில் கருணாநிதியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. தொண்டா்களின் கூட்டம் திடீரென அதிகமானதால் அங்கு நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி சுமாா் 15 போ் காயமடைந்துள்ளனா். அவா்கள் அனைவரும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதனைத் தொடா்ந்து கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கட்சியின் செயல் தலைவா் மு.க.ஸ்டாலின் தொண்டா்கள் மத்தியில் பேசினாா். அவா் பேசுகையில், தொண்டா்கள் அமைதி காக்க வேண்டும். யாரும் முன்னேறி வரவேண்டாம் என்று தொிவித்தாா். மேலும், கலைஞரின் புகழை மறைக்கும் வகையில், அவரது உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், அதனை எதிா்த்து நீதிமன்றம் வாயிலாக வெற்றி பெறப்பட்டள்ளது.

இதன் மூலம் கலைஞா் கருணாநிதி மறைந்த பின்பும் இடஒதுக்கீட்டில் வெற்றி பெற்றுள்ளாா் என்று பேசினாா்.

அடுத்த செய்தி