ஆப்நகரம்

எதுல ஊழல் நடந்தாலும் கண்டுக்காதுபா; எதுக்கும் உதவாத தமிழக அரசு: மு.க.ஸ்டாலின்...!

எதில் ஊழல் நடந்தாலும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

TNN 30 Jun 2017, 6:37 pm
சென்னை: எதில் ஊழல் நடந்தாலும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
Samayam Tamil stalin says tn govt wont take any action
எதுல ஊழல் நடந்தாலும் கண்டுக்காதுபா; எதுக்கும் உதவாத தமிழக அரசு: மு.க.ஸ்டாலின்...!


சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தற்போதைய ஆட்சி குதிரைப் பேரத்தால் நடைபெற்று வருகிறது. குட்கா ஊழல் ஆனாலும் சரி, ஓட்டுக்கு பணம் கொடுப்பதானாலும் சரி, எதையுமே இந்த ஆட்சி கண்டுகொள்வதில்லை என்று குற்றம்சாட்டினார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் மருத்துவத்துறை உயிரை பறிக்கக்கூடிய வகையில் செயல்படுவதால், மக்கள் அச்சத்தில் உள்ளதாக குறிப்பிட்டார். கொளத்தூர் தொகுதியை பார்வையிட்ட போது, அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதை மு.க.ஸ்டாலின் உறுதிப்படுத்தினார்.

Stalin says TN govt won’t take any action, whether it is gutka scam or bribe to voters.

அடுத்த செய்தி