ஆப்நகரம்

தாது மணல் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை: ஸ்டாலின் வலியுறுத்தல்

தாது மணல் குவாரி முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை தேவை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 24 Jul 2018, 6:08 pm
தாது மணல் குவாரி முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை தேவை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil MK-Stalin-1


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 1 கோடி மெட்ரிக் டன் தாதுமணல், குவாரிகளிலிருந்து அள்ளிச் செல்லப்பட்டுள்ளது. தாது மணல் குவாரிகளில் நடைபெற்ற இமாலய முறைகேடுகள் குறித்து 1,170 பக்க சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு கஜானாவிற்கு ஏற்பட்டுள்ள வரலாறு காணாத இழப்பு வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் “ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையிலான விசாரணை குழுவின் அறிக்கையை வைத்து, சிபிஐ விசாரணைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால், மத்திய அரசே நேரடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.” எனவும் கூறியுள்ளார்.

எக்காரணம் கொண்டும் தாதுமணல் குவாரிகளைத் திறக்க மீண்டும் அனுமதி வழங்கக் கூடாது எனவும் அவர் தனது அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அடுத்த செய்தி