ஆப்நகரம்

“தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்” : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

“தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்” : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

TNN 21 Nov 2016, 7:39 pm
சென்னை : தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil stalin urges centre to declare tamil nadu as drought hit state
“தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்” : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் மக்கள் தண்ணீருக்காக கஷ்டப்படுகின்றனர். பல இடங்களில் மக்களுக்கு குடிக்க கூட தண்ணீர் கிடைக்கவில்லை. தண்ணீர் பஞ்சத்தால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். மாநிலத்தின் பெரும்பாலான நீர்த்தேக்கங்களில் நீர் இல்லை என்றும், சென்னையில் உள்ள ஏரிகள் வற்றிப்போய் உள்ளன என்றும் தனது அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகா தண்ணீர் தர மறுத்ததால் காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிகள் பாதிப்படைந்துள்ளன. ஈரோடு மற்றும் டெல்டா மாவட்டங்களில் 11 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகளுக்கு 1 லட்ச ரூபாய் காப்பீடு வழங்கும் திட்டமும் தமிழக அரசால் அமல்படுத்தப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அங்கம் வகிக்கும் தமிழக அமைச்சர்கள் இது குறித்து பேச வேண்டும் என்றும், தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் கூட்டி இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அப்படி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றும் பட்சத்தில் திமுக முழு ஆதரவு அளிக்கும் என்றும் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி