ஆப்நகரம்

எழுவர் விடுதலை: ஆளுநர் அலட்சியம்; மறைத்த எடப்பாடி; கேள்வி எழுப்பும் ஸ்டாலின்

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களின் விடுதலை மீண்டும் அரசியல அரங்கில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Samayam Tamil 19 Oct 2019, 10:02 am
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுவிக்கக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, நீதிபதிகள் ரஞ்சன் கோஹாய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் ஆகிய மூவர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
Samayam Tamil Untitled collage (10)


அப்போது, ‘குற்றம் சுமத்தப்பட்ட 7 பேர் குறித்து முடிவெடுக்க தமிழ்நாடு அரசுக்கு உரிமையுண்டு. அவர்கள் ஆளுநருக்கு விடுதலை குறித்து பரிந்துரை செய்யலாம்’ என்று தெரிவித்தது.

ராஜீவ் படுகொலை: சர்ச்சை பேச்சால் சீமான் மீது பாய்ந்த வழக்கு!

இதனால் தமிழ்நாடு அமைச்சரவை ஏழு தமிழர்களை விடுதலை செய்யவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு ஆளுநரிடம் வழங்கினர். ஒரு வருடம் ஆகியும் அமைச்சரவை தீர்மானம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்துவரும் ஏழு தமிழர்கள் எப்போது விடுதலை என்பது தெரியாமல் தங்கள் வாழ்வை கழித்துவருகின்றனர்.

இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏழு தமிழர்களை விடுதலை செய்ய விருப்பமில்லை என்று எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

எழுவர் விடுதலை: பிரதமரிடம் வலியுறுத்திய பாமக

அதிமுக அரசு ஏழு தமிழர்களை விடுதலை செய்ய ஆர்வம் காட்டிவருவதாக தொடர்ந்து கூறிவந்த நிலையில் ஆளுநர் பதிலளித்தது குறித்து தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிலைப்பாடு என்ன என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், "பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழக ஆளுநர், முதலமைச்சரிடம் தெரிவித்து விட்டதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து முதல்வர் அவர்கள், தமிழக மக்களுக்கு உடனே விளக்கம் தந்திட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

இவங்களுக்கு சுவிஸ் வங்கியில் பணமாம்: மோடி கணக்கெடுப்பதாக ராஜேந்திரா பாலாஜி தகவல்!!

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பாக இயங்கிவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து விளக்கம் அளிப்பதோடு, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே தமிழ் உணர்வாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

அடுத்த செய்தி