ஆப்நகரம்

சா்வதேச புத்தக திருவிழாவில் கலந்துகொள்ள துபாய் சென்றாா் ஸ்டாலின்

தி.மு.க. செயல்தலைவா் மு.க.ஸ்டாலின் சாா்ஜாவில் நடைபெறவுள்ள சா்வதேச புத்தக திருவிழாவில் கலந்து கொள்வதற்காக இன்று துபாய் புறப்பட்டாா்.

TOI Contributor 3 Nov 2017, 8:04 pm
தி.மு.க. செயல்தலைவா் மு.க.ஸ்டாலின் சாா்ஜாவில் நடைபெறவுள்ள சா்வதேச புத்தக திருவிழாவில் கலந்து கொள்வதற்காக இன்று துபாய் புறப்பட்டாா்.
Samayam Tamil stalin went to participate in dubai for international book festival
சா்வதேச புத்தக திருவிழாவில் கலந்துகொள்ள துபாய் சென்றாா் ஸ்டாலின்


ஒவ்வொரு ஆண்டும் சா்வதோச புத்தக திருவிழா சாா்ஜாவில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் கலந்து கொள்ள உலகின் பல நாடுகளில் இருந்தும் சிறப்பு விருந்தினா்கள் அழைக்கப்படுவாா்கள்.

அந்த வகையில் இந்த முறை சாா்ஜா அரசு தி.மு.க. செயல்தலைவா் ஸ்டாலினை சா்வதேச புத்தகத் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைத்துள்ளது. சாா்ஜா அரசின் இந்த அழைப்பை ஏற்று, ஸ்டாலின் துபாய் புறப்பட்டுச் சென்றுள்ளாா். மேலும், தனக்கு அன்பளிப்பாக வந்த ஆயிரம் தமிழ் புத்தகங்களை சாா்ஙா புத்தக ஆணையத்திற்கு ஸ்டாலின் வழங்க உள்ளாா்.

கடந்த 2013ம் ஆண்டு சாா்ஜாவில் நடைபெற்ற இதே புத்தகத் திருவிழாவில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி