ஆப்நகரம்

”கத்தாரில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பை உறுதி செய்க..!”- ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம்..!

"கத்தாரில் வாழும் இந்தியர்களின் நலனை பாதுகாக்க உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

TNN 6 Jun 2017, 5:28 pm
"கத்தாரில் வாழும் இந்தியர்களின் நலனை பாதுகாக்க உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Samayam Tamil stalin writes letter to sushma swaraj regarding qatar crisis
”கத்தாரில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பை உறுதி செய்க..!”- ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம்..!


தீவிரவாதிகளுக்கு உதவி செய்து வருவதாக கூறி, கத்தார் நாட்டுடனான அனைத்து தொடர்புகளையும் சவுதி அரேபியா உட்பட ஆறு வளைகுடா நாடுகள் துண்டித்துள்ளன. இதனால் அந்நாட்டில் வாழும் பல லட்சம் இந்தியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில் கத்தாரில் வாழும் இந்தியர்களின் நலனை பாதுகாக்க உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

”தற்போது கத்தாரில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலினால், அங்கு வசிக்கும் இந்தியர்களின் நலனை பாதுகாக்க கத்தார் தலைநகர் தோகாவில் உள்ள இந்திய தூதரகத்தை விரைந்து நடவடிக்கை எடுக்க நீங்கள் அறிவுறுத்த வேண்டும்.கத்தாரில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பு நமக்கு மிகவும் முக்கியம். கத்தாரில் வாழும் இந்தியர்களின் நலனை பாதுகாக்க, உங்கள் கீழ் செயல்பட்டு வரும் இந்திய வெளியுறத்துறை தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க துவங்கியிருக்கும் என நம்புகிறேன்.” என ஸ்டாலின் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழர்கள் உட்பட கத்தாரில் வசிக்கும் சுமார் 6.5 லட்சம் இந்தியர்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ” கத்தாரில் வசித்து வரும் இந்தியர்களின் குடும்பத்தினர் மிகவும் கவலையில் உள்ளனர். எனவே தனிப்பட்ட கவனத்தை இந்த விஷயத்தில் அளிக்க வேண்டும் என நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன்.” என ஸ்டாலின் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

Qatar crisis: Stalin urges Centre to take steps to allay fears of Indians

அடுத்த செய்தி