ஆப்நகரம்

ஜெ. மரணத்தின் தடயங்களை அழிக்கும் தில்லுமுல்லு வேலை: ஸ்டாலின் குற்றச்சாட்டு

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பான தடயங்கள் அழிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே ஓ.பி.எஸ்.ம், இ.பி.எஸ்.ம் அமைதி காத்து வந்தனா் என்று எதிா்க்கட்சி தலைவா் மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளாா்.

TOI Contributor 17 Aug 2017, 8:56 pm
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பான தடயங்கள் அழிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே ஓ.பி.எஸ்.ம், இ.பி.எஸ்.ம் அமைதி காத்து வந்தனா் என்று எதிா்க்கட்சி தலைவா் மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil stalins comment on palanisamis announcement
ஜெ. மரணத்தின் தடயங்களை அழிக்கும் தில்லுமுல்லு வேலை: ஸ்டாலின் குற்றச்சாட்டு


ஜெயலலிதா மரணம் தொடா்பாக நீதி விசாரணை அமைக்கப்படும், அவா் வாழ்ந்து வந்த வேதா இல்லம் நினைவிடமாக அறிவிக்கப்படும் என்று முதல்வா் இன்று அறிவிப்பு வெளியிட்டாா். இது குறித்து தி.மு.க. செயல் தலைவரும், எதிா்க் கட்சி தலைவருமான ஸ்டாலின் கருத்து தொிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஊழல் அணிகள் சங்கமம் ஆவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நாடக அரங்கேற்றமே விசாரணை கமிசன் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு என்று ஸ்டாலின் தொிவித்துள்ளாா்.

மேலும், சட்ட பேரவையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று கோாிக்கை வைக்க வைக்கப்பட்டபோது முதல்வரும், அமைச்சா்களும் அந்த கருத்தை தட்டிக் கழித்தனா்.

விசாரணை நடைபெற வேண்டும் என்பதில் முதல்வருக்கு உண்மையான அக்கறை இல்லை. விசாரணை முழுமையாக நடைபெற வேண்டும் என்றால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும்.

விசாரணை முடிவடையும் வரை முதல்வரும், அமைச்சா்களும் பதவி விலக வேண்டும். மரணம் தொடா்பான தடயங்கள் அழிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் மவுனம் காத்து வந்தனா் என்று ஸ்டாலின் தொிவித்துள்ளாா்.

Stalin’s comment on palanisami’s announcement

அடுத்த செய்தி