ஆப்நகரம்

இந்த ஆண்டு பொதுத் தேர்வு: அரசுத் தேர்வுகள் இயக்ககம் பிறப்பித்த உத்தரவு!

பொதுத் தேர்வு மையங்களை அமைப்பதற்கான கருத்துக்களைப் பெற அரசு தேர்வுகள் இயக்ககம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 9 Oct 2021, 11:09 am
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. பத்தாம், பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் நடத்தப்பட முடியாமல் போனது.
Samayam Tamil TN School Exam


தமிழ்நாடு அரசு மேற்கொண்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. தடுப்பூசி பயன்பாடும் அதிகரித்துள்ளதால் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டன. பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணக்கர்களுக்கு நேரடு வகுப்புகள் தொடங்கப்பட்டது.
கல்லூரி மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் நியூஸ்: சொன்னதை செய்த தமிழக அரசு!
இதனையடுத்து 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணக்கர்களுக்கு எப்போது நேரடி வகுப்புகள் தொடங்கும் என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கிய துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

எனவே இம்முறை பொதுத் தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு புதிய தேர்வு மையங்கள் அமைப்பதற்கான கருத்துக்களை 30ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க சிஇஓ க்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்கம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிரான வழக்கு: தடை விதித்த நீதிமன்றம்
அதேபோல் தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் இதர பல்கலைகழகங்களில் நடப்பு கல்வி ஆண்டிலும் ப்ரொபஷனல் இங்கிலீஷ் பாடம் கட்டாயம் என்று உயர் கல்விக்கான மாநில கவுன்சிலிங் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி