ஆப்நகரம்

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.56.92 கோடி ஓதுக்கீடு : முதல்வர் அறிவிப்பு

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாததால் டெல்டா விவசாயிகளுக்கு 522.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

TNN 12 Jun 2017, 2:01 pm
சென்னை : மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாததால் டெல்டா விவசாயிகளுக்கு ரூ.56.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
Samayam Tamil statement of the tn chief minister on kuruvai package scheme
டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.56.92 கோடி ஓதுக்கீடு : முதல்வர் அறிவிப்பு


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கடந்த ஆண்டில் கர்நாடக மாநில அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய நீரை உரிய பங்கீட்டின்படி,தராததால், மேட்டூர்அணையிலிருந்து கடந்த ஜுன் மாதம் 12ஆம் தேதி அன்று குறுவை சாகுபடிக்காக நீர் திறக்கமுடியவில்லை.

இதனைத் தொடர்ந்து, டெல்டா விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், நிலத்தடி நீரை பயன்படுத்தி, குறுவை சாகுபடியினை மேற்கொள்ள, ரூ.54.65 கோடி செலவில் குறுவை சிறப்புத் தொகுப்புத் அரசு செயல்படுத்தியது.இதன் விளைவாக 3.16 இலட்சம் ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு 1,37,314 விவசாயிகள் பயனடைந்தனர்.

மேலும், தமிழக அரசு பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு காப்பீட்டுத் திட்டங்கள் வாயிலாக பயிர் இழப்பீட்டுத் தொகையை சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் வழங்கிட நடவடிக்கை எடுத்து வருகிறது.

2017-18 ஆம் ஆண்டிலும், பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சுமார் 51 இலட்சத்து 38 ஆயிரம் ஏக்கரில் வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்யும் 24 இலட்சம் விவசாயிகளைப் பதிவு செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு காப்பீட்டு மானியத் தொகையாக ரூ.522.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

டெல்டா மாவட்டங்களுக்கு இந்தாண்டும் 12 மணிநேர மும்முனை மின்சாரம் வழங்கப்படும். பசுந்தாள்உரப்பயிர்சாகுபடி செய்ய ஏக்கர் ஒன்றிற்கு ரூ1,200 என 100% மானியம் தரப்படும். தற்போதைய நிலையில் 1.60லட்சம் ஏக்கரில் நெற்பயிர்சாகுபடி செய்யதிட்டமிடப்பட்டுள்ளது.

பயிறுவகைப் பயிர்களின் சாகுபடியை ஊக்கப்படுத்த விதைகளுக்கு ஏக்கருக்கு ரூ.960; உயிர் உரங்கள் விநியோகிக்க ஏக்கருக்கு ரூ.640 வீதம் வழங்கப்படும்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி