ஆப்நகரம்

கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் எப்போது? உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

சிலைகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 30 Jul 2018, 8:38 pm
சென்னை: சிலைகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
Samayam Tamil Chennai high Court


தமிழகக் கோவில்களில் இருக்கும் சிலைகள் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்பான வழக்கு ஒன்றை, சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரித்தது. அப்போது தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி, வரும் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் தமிழகத்தின் 242 கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் கட்டி முடிக்கப்படும். இதற்காக மாவட்ட அளவிலான அதிகாரிகள் கொண்ட குழு, இன்னும் 2 வாரங்களில் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது.

இதையடுத்து பேசிய நீதிபதிகள், முதல்கட்டமாக தஞ்சை, பந்தநல்லூர் கோவில்களில் பாதுகாப்பு அறை கட்ட வேண்டும். பாதுகாப்பு கட்டுவதற்கான நிதி, அறநிலையத்துறை வங்கி கணக்கில் உள்ள ரூ.547 கோடியில் இருந்து ஒதுக்க வேண்டும்.

இந்த வழக்கில் கோவில் சிலைகளை அடையாளம் காணும், அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும். மேலும் சிலை திருட்டு வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று விளக்கமளிக்க வேண்டும்.

குறிப்பாக சிலை திருட்டு அபாயம் உள்ள கோவில்களின் பட்டியலை நீதிமன்றத்தில் தாக்க செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்நிலையில் சிலை பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை, இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Statue security rooms will be constructed says Tamil Govt to Chennai High Court.

அடுத்த செய்தி