ஆப்நகரம்

ஸ்டெர்லைட் ஆய்வுக்கு அவகாசம் நீட்டிப்பு: பசுமைத் தீர்ப்பாயம்

நவம்பர் 30ஆம் தேதிக்குள் தருண் ஸ்டெர்லைட் ஆலை பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்க நீதிபதிகள் குழுவினரை அறிவுறுத்தினர்.

Samayam Tamil 15 Oct 2018, 10:18 pm
ஸ்டெர்லைட் ஆலை ஆய்வுக்காக அமைக்கப்பட்ட தருண் அகர்வாலா குழுவுக்கு அளிக்கப்பட்ட அவகாசத்தை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நீட்டித்துள்ளது.
Samayam Tamil 201808210421085871_Sterlite-plant-affair-Committee-headed-by-retired-Judge-_SECVPF


தமிழக அரசின் உத்தரவுக்கு பின் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. ஆலை மூடப்பட்டதுக்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையில் சதீஷ் சி.கர்கோட்டி மற்றும் வரலட்சுமி உட்பட மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தது பசுமைத் தீர்ப்பாயம். இந்தக் குழு ஆறு வாரங்களில் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டது.

தருண் அகர்வாலா குழுவின் அவகாசம் அக்டோபர் 30ஆம் தேதி முடியும் நிலையில், கூடுதல் அவகாசம் கேட்டு குழுவின் சார்பில் கேட்கப்பட்டது. இது பற்றி இன்று விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், 4 வாரங்களுக்கு அவகாசம் அளிப்பதாக அறிவித்தது.

நவம்பர் 30ஆம் தேதிக்குள் தருண் ஸ்டெர்லைட் ஆலை பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்க நீதிபதிகள் குழுவினரை அறிவுறுத்திய நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அடுத்த செய்தி