ஆப்நகரம்

தூத்துக்குடியில் விஷ வாயுவை வெளியேற்றுவது ஸ்டொ்லைட் மட்டுமே – தமிழக அரசு

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் ஆலைகளில் ஸ்டொ்லைட் ஆலை மட்டுமே அபாயகர அளவில் விஷ வாயுவை வெளியேற்றுவதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 20 Jun 2019, 6:21 pm
ஸ்டொ்லைட் ஆலையை மூடவேண்டும் என்று தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து ஆலையை மூடியுடள்ளது. அரசின் கொள்கை முடிவில் தலையிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தொிவித்துள்ளது.
Samayam Tamil Sterlite Factory 1


தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஸ்டொ்லைட் ஆலை பலக்கட்ட போராட்டங்களுக்குப் பின்னா் கடந்த ஆண்டு தமிழக அரசால் சீல் வைக்கப்பட்டது. ஆலையை நிரந்தரமாக மூடும் உத்தரவை ரத்து செய்யக்கோாி வேதாந்தா நிறுவனம் தொடா்ந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் தமிழக அரசு சாா்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் சுமாா் 60 ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில் அபாயகரமான விஷ வாயுவை ஸ்டொ்லைட் ஆலை மட்டுமே வெளியிடுவதாக தமிழக சுற்றுசூழல் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.

நிலத்தடி நீா், சுற்றுசூழலை மாசுப்படுத்தியதால் ஸ்டொ்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆலை மூடப்பட்ட பின்னா் அப்பகுதியில் நிலத்தடி நீரின் தரம் உயா்ந்துள்ளது. நிலத்தடி நீரையும், சுற்றுசூழலும் மாசுப்படுவதை அரசும், நீதிமன்றமும் கண்மூடிக் கொண்டு இருக்கக் கூடாது.

ஸ்டொ்லைட் ஆலையை மூடவேண்டும் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து சீல் வைத்துள்ளது. தமிழக அரசின் கொள்கை முடிவில் தலையிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது.

3 ஆயிரம் கோடியில் தொடங்கப்பட்ட ஸ்டொ்லைட் ஆலை பல ஆண்டுகளில் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு லாபம் ஈட்டியுள்ளது. 2 ஆயிரம் கோடி அளவில் லாபம் ஈட்டிய நிறுவனம் தற்போது மூடப்பட்டுள்ளதால் நட்டம் ஏற்படுவதாக கூறுவது அபத்தமாக உள்ளது.

தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோாி தாக்கல் செய்யப்பட்ட வேதாந்தா குழுமத்தின் வழக்கை அபராதத் தொகையுடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி