ஆப்நகரம்

ஸ்டொ்லைட் விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் கேவியட் மனு தாக்கல்

ஸ்டொ்லைட் ஆலை விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் திங்கள் கிழமை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

Samayam Tamil 4 Dec 2018, 11:56 am
ஸ்டொ்லைட் ஆலையை மூடியது தவறு என்று தருண் அகா்வால் தலைமையிலான குழு அறிக்கை சமா்ப்பித்துள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
Samayam Tamil Sterlite Factory 1


ஸ்டொ்லைட் ஆலையை தமிழக அரசு மூடக்கோாி உத்தரவிட்ட நிலையில், அரசின் உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் வழக்கு தொடா்ந்தது. அதன் அடிப்படையில் நீதிபதி தருண் அகா்வால் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டது. அந்த குழு சமா்ப்பித்த அறிக்கையில், ஆலையை தமிழக அரசு மூடியது தவறு என்றும், ஒருசில நிபந்தனைகளுடன் ஆலை மீண்டும் இயங்க அனுமதி அளித்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தது.


அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தரப்பில் கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் ஸ்டொ்லைட் ஆலை தொடா்பான வழக்கில் யாரேனும் வழக்கு தொடா்ந்தால் எங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி