ஆப்நகரம்

ஸ்டெர்லைட் ஆலையை மூட முன்னோட்டம்: அமைச்சர் தங்கமணி

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான முன்னோட்டமே மின் இணைப்பு துண்டிப்பு என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

Samayam Tamil 26 May 2018, 2:39 pm
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான முன்னோட்டமே மின் இணைப்பு துண்டிப்பு என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
Samayam Tamil Thangamani_16361


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தபோது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு விதிக்கப்பட்டிருந்த 144 தடை 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மேலும் இணையவசதியும் துண்டிக்கப்பட்டுள்ளது. புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி எடுத்த துரித நடவடிக்கைகள் காரணமாக அங்கு மெதுவாக இயல்பு நிலை திரும்பிக்கொண்டிருக்கிறது.

இதனிடையே, போட்டத்தின் எதிரொலியாக ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பை தமிழக அரசு துண்டித்துள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ள மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான முன்னோட்டமே மின் இணைப்பு துண்டிப்பு என்று தங்கமணி கூறியுள்ளார். மேலும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடுவோருக்கு எதிராக அரசு இருக்காது என்றும் உறுதியளித்துள்ளார்.

அடுத்த செய்தி