ஆப்நகரம்

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை இறந்தவர்களின் உடலை வாங்க மாட்டோம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Samayam Tamil 23 May 2018, 1:32 pm
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Samayam Tamil ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை இறந்தவர்களின் உடலை வாங்க மாட்டோம்:
ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை இறந்தவர்களின் உடலை வாங்க மாட்டோம்:


தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அ.குமெரெட்டியாபுரம் கிராம மக்களின் போராட்டம் நேற்று 100வது நாளை எட்டிய நிலையில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல்லாயிரகணக்கான கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர்.

அப்போது கிராம மக்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனால் ஆயிரகணக்கில் திரண்ட மக்கள், அத்தனை தடுப்புகளையும், தடியடைகளையும் மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்தனர்.

அப்போது போலீசார் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் தூத்துக்குடியைச் சேர்ந்த கந்தையா, ஷண்முகம், மணிராஜ், ஸ்நோலின், வினிதா தாளமுத்து நகரைச் சேர்ந்த கிளாஸ்டன், ஆண்டனி செல்வராஜ் ஆகியோர் உயிரிழந்தனர். தூத்துக்குடி சிப்காட் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார், ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த தமிழரசன் ஆகியோர் பலியாகினர்.

இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கார்த்திக் என்பவர் இன்று உயிரிழந்தார். இன்னும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இன்று காலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சுட்டுக் கொன்ற அரசை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலை மூடினால்தான் பலியானவர்களின் உடல்களை வாங்குவோம் என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில் கூறுகையில், “ஸ்டெர்லைட் ஆலையை மூட எழுத்து பூர்வமாக அரசு உத்தரவாதம் கொடுக்கவேண்டும். துப்பாக்கி சூடு நடத்திய காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும்”என்றனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

அடுத்த செய்தி