ஆப்நகரம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - நிவாரண நிதி உயர்வு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர்.

Samayam Tamil 27 May 2018, 5:30 pm
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர்.
Samayam Tamil thoothukudi


தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டால் 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இதையடுத்து பல்வேறு அமைப்புகள், கட்சிகள் சார்பாக அரசுக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் பலியான, காயமடைந்த குடும்பத்தினருக்கு நிவாரண நிதியை அரசு அறிவித்தது. அரசு அறிவித்த நிதியை உயர்த்தி வழங்க பாதிக்கப்பட்டோர் ஐஏஎஸ் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். அதோடு நிவாரணத்தை உயர்த்த பரிசீலிக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்ததோடு, உயர் நீதிமன்ற மதுரை கிளையும் அறிவுறுத்தியது.

நிவாரண நிதி உயர்வு:
இந்நிலையில் முதலில் அறிவிக்கப்பட்ட நிவாரண நிதி அறிக்கையில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சத்திலிருந்து தற்போது நிவாரண நிதி உயர்த்தி ரூ. 20 லட்சமாக வழங்கப்படுகிறது.
பலத்த காயமடைந்தோருக்கு ரூ. 3 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக அதிகரிப்பு.
சிறிய காயமடைந்தோருக்கான நிவாரண நிதி ரூ. 1 லட்சத்திலிருந்து 1.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி