ஆப்நகரம்

அமைதியான வழியில் போராட்டம் தொடரும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்!

அமைதியான வழியில் தங்களது போராட்டம் தொடரும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 16 Dec 2018, 12:07 pm
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதியளித்த நிலையில், அமைதியான வழியில் தங்களது போராட்டம் தொடரும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil அமைதியான வழியில் போராட்டம் தொடரும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்!
அமைதியான வழியில் போராட்டம் தொடரும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்!


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கோரியும், தமிழக அரசின் நடவடிக்கைக்குத் தடை விதிக்கக் கோரியும் வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நீதிபதி தருண் அகர்வாலா குழு மூலம் ஸ்டெர்லைட்டில் ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டதன் பேரில் ஆய்வு நடைப்பெற்றது.

இந்நிலையில், தருண் அகர்வாலா குழுவின் பரிந்துரையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை இயக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்குவதற்கான உரிமத்தை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பித்து வழங்க வேண்டுமென கூறியுள்ள தீர்ப்பாயம், ஆலைக்கு உடனே மின்சாரம் வழங்க வேண்டும் என்றும், ஆலையை திறக்க போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை அடுத்து, தூத்துக்குடிய பழைய பேருந்து நிலையம், வி.வி.டி. சிக்னல், மாதாகோவில், திரேஸ் புரம் உள்ளிட்ட பல இடங்களிலும். ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை முன்பும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, அமைதியான வழியில் தங்களது போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி