ஆப்நகரம்

மழை நிக்காதாம்...

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...

Samayam Tamil 3 Dec 2019, 1:36 pm
தமிழ்நாட்டில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. கனமழைக் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது. மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகின்றன. கடந்த ஆண்டுகளைவிட இந்த முறை வடகிழக்கு பருவத்தில் தமிழ்நாட்டிற்கு அதிகளவு நீர் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Samayam Tamil chennairainfall-kbbD--621x414@LiveMint


மழை வந்தாலும் பிரச்சினை, வராட்டாலும் பிரச்சினை: விவசாயிகள் புலம்பல்!

வானிலை நிலவரம் குறித்து தென் மண்டல தலைவர் பாலசந்திரன் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில், (இலங்கை, தென் தமிழ்நாடு) காற்றழுத்தத் தாழ்வு நிலை தொடர்ந்து நிலவி வருகிறது. இதன் காரணமாகச் சமீப நாட்களாகத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மழைப் பொழிவைப் பொறுத்தவரை அதிகபட்சமாக குன்னூரில் 13 செமீ, ராமநாதபுரத்தில் 9 செ மீ பதிவாகியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

காஞ்சிபுரம்: கனமழையால் நிரம்பிய ஏரிகள் எத்தனை தெரியுமா?

குமரிக் கடல் பகுதியில் பலத்த சூரைக் காற்று வீசக் கூடும். இதனால், மீனவர்கள் யாரும் குமரிக்கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை, அதன் புறநகர்ப் பகுதியில் பரவலாக மழை பெய்யும். கடந்த அக்டோபர் 1 முதல் இன்று வரை 42 செ மீ மழை பதிவாகியுள்ளது. இயல்பாக இந்த காலகட்டத்தில் 36 செ மீ மழை பதிவாகும். இது இயல்பைவிட 13 சதவீதம் அதிகம்.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி